காயல்பட்டினிகளின் பட்கல் பயணம்
பட்கல், இந்தியாவின் மேற்குக் கரையோரம் உத்தர கர்நாடகத்தில் அமைந்துள்ள நகரம் ஓரிருமுறை மறைந்த காயல் வரலாற்றாசிரியர் அப்துல் லத்தீப் ஹாஜியார் "பட்கல் அப்படியே நம்ம ஊரு மாதிரி தான் இருக்கும்" என்று கூறியிருக்கிறார். எகிப்திலிருந்து புறப்பட்டு காயல் வந்த கப்பலோடு 4 கப்பல்கள் புறப்பட்டதாகவும் அதில் ஒன்றில் பயணித்தவர்கள் பட்கலில் கரை ஒதுங்கிய தாகவும் ஒரு செவிவழிச் செய்தி உண்டு. மேற்கொண்டு பட்கல் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. கொரோனா முதல் அலை ஓய்ந்த சமயத்தில் காயல் பாரம்பரிய நடைக்காக பஷீராக்காவிடம் (சாளை பஷீர்) அறிமுகமாகி பின்னர் காயல்பதி குழும செயல்பாடுகளின் மூலம் நெருக்கம் உண்டானது. சென்னையில் இருக்கும் பொழுது தொண்டியார் பேட்டை ஸூபி ஞானி. குணங்குடி மஸ்தான் ஸாஹிப் நினைவிடம், திருவல்லிக்கேணி முஹம்மடன் லைப்பரேரி, அறபு குடியேற்ற பகுதிகளில் ஒன்றான பழவேற்காடு என அருகிலிருக்கும் சிறிய இடங்களுக்கு அழைத்துக் கொண்டிருந்தவர் திடீரென பட்கல் பயணத்திட்டத்தை முன்வைத்தார். தோழமார்களோடு ஊட்டி முதல் உம்றா வரை வாய் வழியாகவே பயணித்து பழக்கப்பட்ட நான் அதே நினைப்பில் பட்கல் பயணத்துக்கும...