இடுகைகள்

எழுத்துகள் அழியாது, அழியவிடவும் கூடாது!

படம்
காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் எழுத்து மேடை கட்டுரைகள் நமது ஊரின், சமூகத்தின் நிறை குறைகள் மற்றும் போதாமைகளை சுட்டிக்காட்டி தீர்வுகளை வழங்கி நிற்கக் கூடியவை அதில் அதிகமாக எழுதியவர்களில் ALS மாமா என்கிற மற்ஹூம் இப்னு அப்பாஸ் அவர்களும் ஒருவர் காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் செயல்பாடுகள் நின்று விட்டிருந்தாலும் சில நேரங்களில் அதில் வெளியான பழைய கட்டுரைகளை மீண்டும் வாசிப்பது வழக்கம் அதில் எதார்த்தமாக கண்ணில் பட்ட “ வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் தேடிய நூல்களைப் பாதுகாத்து வைப்பது யார் கடமை? சிந்திப்போம் வாரீர் !!” என்கிற ALS மாமாவின் கட்டுரை நமதூர்வாசிகள் எழுதிய பழைய நூல்களை குறிப்பாக வரலாற்று நூல்களை மென் பிரதிகளாக (soft copy) இணையத்தில் பதிவேற்றி பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது அதன் விளைவாக நமதூர் பற்றி வெளிவந்த நூல்களின் விவரத்தை சேகரித்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் (https://kayalkaaran.blogspot.com/2021/06/blog-post.html) தனிப்பட்ட முறையிலும் வரலாற்று ஆர்வலர்களிடம் நூல்களை வேண்டியதன் விளைவாக நூல்களின் பட்டியலும் அந்த நூல்களின் அசல் பிரதிகளும் க...

காயல்பட்டின உறவுமுறை சொற்கள்

படம்
உறவுமுறை சொற்கள் சமூக வாழ்வில் இருவருக்கு இடையிலான நெருக்கத்தையும் உரிமையையும் வெளிப்படுத்தக் கூடியவை, வட்டார மற்றும் சாதி அடிப்படையில் உறவுமுறை சொற்களில் வேறுபாட்டை காணலாம் அவை பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தமிழக முஸ்லிம்களின் உறவுமுறை சொற்களை பற்றிய தகவலை தேடினால், உம்மா என்பது தமிழ் சொல்லா அறபு சொல்லா?, வாப்பா என்பது எந்த மொழிச் சொல்? என்பது போன்ற விவாதத்தை தான் காண முடியும், கூடுதலாக எந்த தகவலையும் பெற இயலாது தமிழக முஸ்லிம்களின் உறவுமுறை சொற்களை உள் மாவட்ட முஸ்லிம் உறவுமுறை சொற்கள், கடலோர மாவட்ட முஸ்லிம் உறவுமுறை சொற்கள், உருது பேசுபவர்களின் உறவுமுறை சொற்கள் என்று பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம் உள் மாவட்ட முஸ்லிம்களின் உறவுமுறை சொற்கள் பெரும்பாலும் கேட்டவுடனேயே தமிழ்ச்சொல் என்பது போல தோன்றக்கூடியது, உருது பேசுபவர்களின் உறவுமுறை சொற்கள் தமிழ் திரிபுவுடன் கூடிய உருது சொல்லாக இருப்பதை உணரலாம் ஆனால், கடலோர மாவட்ட முஸ்லிம்களின் உறவுமுறை சொற்கள் இதிலிருந்து வேறுபட்டு தோற்றம் அளிக்கும் தமிழகத்தின் பழவேற்காடு துவங்கி கடலோரமாக கேரளம் வரையிலும் இலங்கை தீவிலும் வசிக்கின்ற ...

காயல்பட்டினிகளின் பட்கல் பயணம்

படம்
பட்கல், இந்தியாவின் மேற்குக் கரையோரம் உத்தர கர்நாடகத்தில் அமைந்துள்ள நகரம் ஓரிருமுறை மறைந்த காயல் வரலாற்றாசிரியர் அப்துல் லத்தீப் ஹாஜியார் "பட்கல் அப்படியே நம்ம ஊரு மாதிரி தான் இருக்கும்" என்று கூறியிருக்கிறார். எகிப்திலிருந்து புறப்பட்டு காயல் வந்த கப்பலோடு 4 கப்பல்கள் புறப்பட்டதாகவும் அதில் ஒன்றில் பயணித்தவர்கள் பட்கலில் கரை ஒதுங்கிய தாகவும் ஒரு செவிவழிச் செய்தி உண்டு. மேற்கொண்டு பட்கல் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. கொரோனா முதல் அலை ஓய்ந்த சமயத்தில் காயல் பாரம்பரிய நடைக்காக பஷீராக்காவிடம் (சாளை பஷீர்) அறிமுகமாகி பின்னர் காயல்பதி குழும செயல்பாடுகளின் மூலம் நெருக்கம் உண்டானது. சென்னையில் இருக்கும் பொழுது தொண்டியார் பேட்டை ஸூபி ஞானி. குணங்குடி மஸ்தான் ஸாஹிப் நினைவிடம், திருவல்லிக்கேணி முஹம்மடன் லைப்பரேரி, அறபு குடியேற்ற பகுதிகளில் ஒன்றான பழவேற்காடு என அருகிலிருக்கும் சிறிய இடங்களுக்கு அழைத்துக் கொண்டிருந்தவர் திடீரென பட்கல் பயணத்திட்டத்தை முன்வைத்தார். தோழமார்களோடு ஊட்டி முதல் உம்றா வரை வாய் வழியாகவே பயணித்து பழக்கப்பட்ட நான் அதே நினைப்பில் பட்கல் பயணத்துக்கும...

Kayal Heritage Walk Dec - 2020

படம்
பதிகை இணைப்பு முகப்பிலுள்ளது காயல் பாரம்பரிய நடை 002  கரு: பிரதான பஜாரின் வணிக வரலாறு தலைமை: சாளை. பஷீர் ஆரிஃப், எழுத்தாளர் நாள் & நேரம்: 5 டிசம்பர் 2020 (சனி) 3:30-4:30 பி.ப வரை துவங்குமிடம்: மஸ்ஜித் - ஆறாம் பள்ளி ஒருங்கிணைப்பு: காயல்காரன் பக்கம் டிசம்பர் 5 சனிக்கிழமை மாலை 3:30 முதல் 5 :00 மணிவரை காயல்பட்டினம் பிரதான பஜாரில் காயல் பண்பாட்டுக் குழு மற்றும் காயல்காரன் சமூக ஊடக பக்கத்தின் ஒருங்கிணைப்பில் காயலின் வணிக வரலாறு எனும் தலைப்பில் பாரம்பரிய நடை (Heritage Walk) நிகழ்வு நடத்தப்பட்டது ஆறாம் பள்ளியில் துவங்கி ஸூயஸ் கார்னர்  (ஐ.சி.ஐ.சிஐ. வங்கி) வரை பஜாரின் பழைய அமைப்பு கட்டடங்கள் மற்றும் அவற்றில் செயல்பட்டு வந்த உள்ளூர் வணிக நிறுவனங்கள் பற்றியம் புன்னைக்காயல், பழையகாயல் காயல்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய பாண்டியர்களின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக திகழ்ந்த காயல் துறைமுகத்தில் நடைபெற்ற முத்து குளிப்பு கடல் மார்க்கமாக செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி மற்றும் போர்த்துகீ...

கவிஞர் காயல் இப்னு செய்குனா மறைவு

படம்
💔 Read Caption தமிழாசிரியரும் சிறந்த வரலாற்று ஆய்வாளருமான "காயல் இப்னு செய்குனா எ. பேராசிரியர். அபுல் பரகாத் அவர்கள்" நேற்றிரவு (14.5.2021) வபாத் ஆகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி றாஜிஊன் நாம் பல வரலாற்று ஆர்வலர்களையும் வரலாற்று ஆய்வாளர்களும் கண்டிருக்கலாம் ஆனால், அரிதிலும் அரிதான அல்லது பலருக்கும் விடை தெரியாத வரலாற்றுத் தகவல்களை மாத்திரமே அதிகம் தெரிந்த ஒருவர் அதுவும் பிரபலமாக அறியப்படாத ஒருவர் இருந்தால் அது நிச்சயம் அபுல் பரகத் சாராக தான் இருந்திருப்பார் வரலாற்றை கூறப்படும் போக்கில் இல்லாமல் ஆய்வு நோக்கில் காண்பவர் அவருடைய முகநூல் பக்கத்தை ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்றுதான் கூற வேண்டும் இப்போது முகநூலை திறந்த போதும் நேற்று ஒருவருடைய கமெண்டில் அவர் இட்ட விளக்கப்பதிவு வந்து நிற்கிறது நேற்று இருந்தவர் இன்று இல்லை ஆனால் துரதிருஷ்டம் நாம் அவருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காமலேயே விட்டு விட்டோம் வல்ல நாயன் அல்லாஹ் அன்னாருடைய பிழைகளைப் பொறுத்து உரிய கூலியை கொடுப்பானாக காயல்காரன் #Kayalkaaran #Kayalpattinam #kayalpatnam

ஆண் பெண் கலப்பு - தீர்வை நோக்கி நகர்வோம்..

படம்
கடந்த வெள்ளிக்கிழமை(12.2.2021) தொடங்கி 3 தினங்களாக நமதூர் ஐக்கிய விளையாட்டு சங்க (USC)மைதானத்தில் ஆண்,பெண் கலப்பு முறையில் வர்த்தக கண்காட்சி🎪 ஒன்று நடைபெற்றது. இதை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். சிலர் இது போன்ற நிகழ்வுகளை தனித்தனி நேரங்கள் என வைக்கலாம் என்றும் தனித்தனி நாட்கள் வைக்கலாம் என்றும் பதிவிட்டிருந்தனர் ஒரு கடைக்கு ஒருபுறம் ஆண்கள் பகுதி மறுபுறம் பெண்கள் பகுதி என்று ஒதுக்குவதன் மூலம் கால விரயத்தை தவிர்க்கலாம் ஆனால் முடிவு செய்ய வேண்டியது ஏற்பாட்டாளர்கள் தான் பல தரப்பிலிருந்தும் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்னர் அந்த கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் இறுதி நாளில் ஆண்கள் & பெண்களுக்கு தனி ⌚நேர ஒதுக்கீடு செய்தனர். சரி, ஆண் பெண் கலப்பு பிரச்சனை இந்தக் கண்காட்சியில் மட்டும் தான் நடைபெறுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆண், பெண் கலப்பு (சில)கந்தூரிகளிலும் பெருநாட்களில் கடற்கரையிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது (இனிமேலாவது இது தொடராமல் இருக்க வேண்டும்)  இதற்கு என்ன தான் தீர்வு ⁉️ முன்பு இருந்ததை விட தற்போது பெண்கள் தங்கள் தேவைகளுக்காக வெளியில்...

காயல்காரன் பக்கத்தின் புதிய முயல்வு - மின்னூலாக்கம்

படம்
காயல்காரன் பக்கத்தின் புதிய முயல்வு “ *மின்னூலாக்கம்* ” காகித அச்சில் வெளிவந்த புத்தகங்களை e-book ஆக டிஜிட்டல் முறையில் மாற்றுவது  *காயல்பட்டினம் பற்றி வெளிவந்த* வரலாற்று நூல்களை *நவீன முறையில் ஆவணப்படுத்தும் ஓர் முயல்வு* , இது நமது ஊரின் வரலாற்றை *அறியவும் மேற்கொண்டு ஆய்வு செய்யவும்* உதவிகரமாக இருக்கும் இன் ஷா அல்லாஹ் நமது ஊர் பற்றி வெளிவந்த *வரலாற்று நூல்கள் சிறப்பு மலர்கள்* போன்றவை உங்களிடம் இருப்பின் அதனை எங்களிடம் அளிக்கவும் அதனை மென் பிரதியாக மாற்றிய பின் அவை *உரியவரிடமே திருப்பி அளிக்கப்படும்.*  காயல்காரன் பகிரி (Whatsapp) : https://bit.ly/2RbQuek முகநூல் : https://facebook.com/kayalkaaran படவரி : https://instagram.com/kayalkaaran கீச்சகம் : https://twitter.com/kayalkaaran வலைப்பூ : https://kayalkaaran.blogspot.com/